ஞானஸ்நானம் Baptism கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்த சிறிய கைப்பிரதியில் ஞானஸ்நானம் என்றால் என்ன? அதை ஏன் எடுக்க வேண்டும்? அதை எவ்வாறு எடுக்கவேண்டும்? அதை எடுப்பதால் என்ன பயன்? போன்றவைகளைப் பற்றி வேத வார்த்தைகளின் ஆதாரங்களைக் கொண்டு நாம் பார்க்கப் போகிறோம். நாம் ஜீவிக்கும் இவ்வுலகில் ஒரு சட்டப்புத்தகத்தையோ அல்லது மூலப்புத்தகத்தையோ கொண்டுதான் ஒரு காரியத்தை நிதானிக்கிறார்கள் அல்லது நியாயப்படுத்துகிறார்கள். அவ்வாறே கிறிஸ்தவர்களுக்கான சட்டப்புத்தகம் வேதாகமம் ஆகும். காரணம் பதிமோத்தேயு 3:16ம் வசனம், "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" என்று கூறுகிறது. ஆகவே, இப்பொழுது கிறிஸ்தவத்தில் நடக்கும் காரியங்கள் சரியா, தவறா என்று பார்க்கவேண்டுமானால், வேத வார்த்தையைத்தான் நாம் ஆதாரமாக பார்க்கவேண்டும். வேதாகமமும் அப்போஸ்தலர் 3:14ல்" தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்று சொல்வோமாக", என்று கூறுகிறது. ஞானஸ்நானம் என்னும் வார்த்தை கிரேக்க மொழியில் 'Bapto' Baptizo என்ற வார்த்தையிலிருந்து ஆங்கில வார்த்தை வாயிலாக, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. 'Bapto' என்ற வார்த்தைக்கு 'முழுகுதல்' (to immerse or sink) என்று அர்த்தமாகும். எனவே ஒரு நபர் முழுக்கு ஞானஸ்நானம் தான் எடுக்கவேண்டும். மத்தேயு 3:16-லும், அப்போஸ்தலர் 8:37,38,39, வசனங்களில் அதற்கான ஒரு சில ஆதாரங்களை பார்க்கமுடியும். குழந்தை ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானம் மற்றும் வேறெந்த முறைப்படி எடுக்கும் ஞானஸ்நானங்கள் சரியான (கிறிஸ்தவ) ஞானஸ்நானம் ஆகாது. முழுக்கு ஞானஸ்நானம் எதற்கு அடையாளமாயிருக்கிறது! சுருக்கமாக சொல்லப்போனால் அது அவரோடேகூட மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுதலில் இணைக்கப்பட்டிருப்போம் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. இதை நாம் ரோமர் 6-ம் அதிகாரத்தில் விவரமாக பார்க்கமுடியும். எனவே ஞானஸ்நானம் ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவளுடைய ஜீவியத்தில் முதல்படியாக இருக்கிறது. அதையே யோவான் 3:5-ல் இயேசு, "ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான்” என்று கூறினார். ஞானஸ்நானம் என்பது ஒருவன் இயேசுகிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய இரத்தம் தன்னுடைய எல்லா பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது என்று வெளிப்படையாக சாட்சிபகருகிற காரியமாயிருக்கிறது. 1பேதுரு 3:21-ம் வசனமும் "இது (ஞானஸ்நானம்) தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன் படிக்கையாயிருக்கிறது" என்று கூறுகிறது. சரி, இப்பொழுது ஞானஸ்நானம் எந்த நாமத்தில் (பெயரில்) எடுக்கவேண்டும் என்று வேதவார்த்தை அடிப்படையிலும், வரலாற்று வழியாகவும் பார்க்கலாம். இப்பொழுது ஞானஸ்நானம் என்று வரும்போது நம் எல்லோருடைய சிந்தையும் மத்தேயு 28:19ம் வசனத்துக்கு திரும்பும். காரணம், இயேசு தாமே நேரிடையாக சீஷர்களிடத்தில், "நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி; பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து" என்று கூறியிருப்பதை நீங்கள் நினைவு கூறலாம். அவ்விதமே "பரிசேயர் சதுசேயர்களின் புளித்த மாவுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றும், என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தை பாணம்பண்ணாவிட்டால் என்னிடத்தில் பங்கில்லை என்றும், இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள் மூன்று நாளைக்குள் இதை எழுப்புவேன்" என்றும் இயேசு உவமைகளால் மேற்கூறின சிலவற்றை, அவர் கூறினவிதமே அதை அப்படியே எடுத்துக் கொள்வோமானால் அதுதான் அதினுடைய உண்மையான அர்த்தமாகுமா? இல்லை. ஏனெனில் அதற்குப்பின் அதினுடைய உண்மையான அர்த்தத்தை சீஷர்கள் புரிந்துக் கொள்வதையும், இயேசுவானவரும் அவற்றை வெளிப்படுத்துவதையும் பார்க்கிறோம். ஆனால் வேதத்தை நன்கு அறிந்திருந்த பரிசேயர்களும், சதுசேயர்களும் பிரதான ஆசாரியரும் இன்னும் (மேசியா) அவர் வரவேண்டும் என்று எதிர்பார்த்திருந்த அநேகர் தங்களுடைய மனித புரிந்து கொள்ளுதலினிமித்தம் அவருடைய வார்த்தைகளை தவறாக புரிந்துக்கொண்டு தேவனுடைய நோக்கத்தையும், அவருடைய சித்தத்தையும் செய்ய தவறி போனார்கள். இயேசுவானவர் பரத்திற்கு செல்வதற்கு முன் சீஷர்களுக்கு கட்டளையிட்டபடியே அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு மேல்வீட்டறையில் காத்திருந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். அதன் பின்னரே பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் மூன்று அலுவல்களில் வெளிப்பட்டவர் ஒரே நபர் என்றும், அந்த ஒரு நபருடைய நாமம் (பெயர்) கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் வெளிப்பாட்டை சீஷர்கள் பெற்றுக் கொண்டார்கள். யோவான் 14:26ம் வசனம் அதை தெரிவிக்கிறது. மேலும் நாமம் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். அதற்கு இணையான தமிழ் வார்த்தை 'பெயர்' என்று பொருள்படும். எனவே, பிதா-அப்பா, குமாரன்-மகன், பரிசுத்த ஆவி என்பது பெயர் கிடையாது. அவை வெறும் ஒரு நபருடைய பட்டப்பெயர்கள் (Titles) ஆகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே (பெயரிலே) என்று பன்மையில் கூறப்படாமல் ஒருமையில் மப்பட்டிருப்பதை கவனியுங்கள். எனவே அது ஒரு நபரின் பெயரை - காட்டுகிறது. அந்த ஒரு நபரின் பெயர் கர்த்தராகிய இயேசு அயிஸ்து. (தீமோத்தேயு 3:16, பிலிப்பியர் 2:10,11, யோவான் 1:1 இன்னும் அநேக வசனங்களும் இதை ஆணித்தரமாக நிரூபிக்கிறது. எனவே இல்வெளிப்பாட்டை பெற்றவர்கள் பழைய ஏற்பாட்டின் யெகோவா கான் புதிய ஏற்பாட்டின் இயேசு என்ற புரிந்துகொள்ளுதலை பெற்று கொள்கிறார்கள். யோவான். 5:39 இதை தெளிவாக கூறுகிறது. வேதாகமம் 1கொரிந்தியர் 13:1-ம் வசனத்தில் "சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே நிலைவரப்படும்”. என்று கூறுகிறது. அதன்படி பார்க்கும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதாகமத்தில் ஒரு இடத்தில் கூட பரிசுத்த ஆவியானவர் குறிப்பிடவில்லை . ஆனால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்ததாக அப்போஸ்தலர் 2:38ல், பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இன்னும் அப்போஸ்த லர் 10:48, 8:12, 8:38, 9:18, 16:33, 18:8, மற்றும் 19:5, வசனங்களில் பரிசுத்த ஆவியானவரே உறுதிப்படுத்துகிறார். எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்தான் ஒருவர் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த நாமத்தினால் மட்டுமே ஒருவர் பாவமன்னிப்பையும், இரட்சிப்பையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், மீட்பையும் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் கேட்கலாம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்தான் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று இதற்கு முன் ஆணித்தரமாக பிரசங்கிக்கப்பட்டோ அல்லது பேசப்பட்டோ நாங்கள் கேள்விப்பட்டதில்லை. மற்றும் இதற்கு முன் இருந்த கிறிஸ்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினால்தான் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார்கள். அப்படியானால் அவர்களுடைய கதி என்ன? சரி அதை சற்று நாம் பார்ப்போம், எருசலேம் தொடங்கி ஆதி சபை முதற்கொண்டு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து வந்த கிறிஸ்தவர்கள் எவ்விடத்திலும் பரவி எண்ணிக்கையில் அதிகமானார்கள். அதன்பின்னர் 4-ம் நூற்றாண்டில் வந்த ரோமச் சககரவாத்தியான கான்ஸ்ட ன்டைன் (Constantine) கிறிஸ்தவர்கள் அதிகமாக பெருகியிருப்பதைக் கண்டு, அவர்களுடைய செல்வாக்கை பெறும் நோக்கத்தில் அவர்களுக்கு பெரும் ஆதரவளித்து, அவர்கள் மாருக்கும் அழைப்புக் கொடுத்தான். அதன் விளைவாக கி.பி ' ஏற்பட்டதுதான் நிசாயா ஆலோசனைக் கூட்டம் (Nicene) கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பான்மையான பெயர் கிறிஸ்தவர்களின் தேவத்துவத்தின் உபதேசத்திற்கு (Doctrine of God) கான்ஸ்டன்டைன் ஆதரவளித்ததால், ஒரு தேவனுக்கு பதிலாக மூன்று தேவன் கொண்ட பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற திரித்துவ போதனையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு பதிலாக பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நான போதனையும் கிறிஸ்ததுவத்திற்குள் புகுத்தப்பட்டது. அதற்கு பின் படிப்படியாக இந்த வெளிப்பாட்டின் வெளிச்சம் மங்கி போனது. அது மட்டுமல்லாமல் அப்பொழுது இருந்த ரோம மத பழக்கவழக்கங்களும் கிறிஸ்தவத்தில் மாற்ற நிலையை கொண்டு வந்தது. அதினுடைய தாக்கம் இப்பொழுதிருக்கும் ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தில் வேதத்தில் சொல்லாத மாறுபாடான உபதேசங்களை கொண்டு வந்தது. எனவே திரும்பவும் (யோவேல் 2:25) இந்த 20-ம் நூற்றாண்டில் இந்த வெளிப்பாடு கொடுக்கப்படுவதற்கு முன் இருந்தவர்களும் அல்லது ஏறக்குறைய கி.பி. 325-க்கு பிறகு வந்தவர்களும் அறியாமையினால் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினால் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார்கள். அதை அப்போஸ்தலர் 17:30-ம் வசனம் "அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார். இப்பொழுதோ மனம்திரும்ப வேண்டும் என்று எங்கும் உள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்", என்று கூறுகிறது. மேலும் உங்களை குழப்பவேண்டுமென்றோ அல்லது புது உபதேசத்தை புகுத்த வேண்டுமென்றோ இதை உங்களுக்கு எழுதவில்லை. ஆனால் அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து நீங்கள் வெளிவரவேண்டும் என்று இக்காலத்திற்கென்று தேவன் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி அவர் (தீர்க்கதரிசி) மூலமாய் வெளிப்படுத்தின சத்திய வார்த்தைகளைக் கொண்டு பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தின புத்தகத்தில் கூறினவிதம் "என் ஜனங்களே... அவளை விட்டு வெளியே வாருங்கள்" என்று சத்தமிடுகிறார் என்பதையே தெரிவித்துக் கொள்கிறோம். கடைசியாக இந்த சிறிய கைப்பிரதியில் எல்லாவற்றையும் விவரமாக எழுத முடியவில்லை. எனினும் நீங்கள் இதைப்பற்றி இன்னும் தெளிவாக தெரிந்து கொண்டு, இக்காலத்திற்கென்று வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள விரும்பினால் எங்கள் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.